Thursday, May 14, 2009

ஒபாமா கருத்துக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு

[வியாழக்கிழமை, 14 மே 2009,] இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருப்பதை விடுதலைப் புலிகள் வரவேற்றுள்ளனர். ''போர்ப் பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்தும், உடனடியாக எடுக்கப்பட வேண்டிய மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் குறித்தும் ஒபாமா காட்டியுள்ள அக்கறையை வரவேற்கிறோம்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் கூறியுள்ளார்.'அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனத்திற்கு அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பாலித கோஹனா கூறுகையில், ''புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், பொதுமக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் ஒபாமா கூறியுள்ள கருத்தை நாங்களும் உறுதியாக வலியுறுத்துகிறோம்'' என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.