[திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009]
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலைமைச்சர் மு.கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது நண்பன் என குறிப்பிட்டது எமக்கு கவலை தருகின்றது.
எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் தமிழகத்தில் அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டே கருணாநிதி இந்த அறிக்கையை விடுத்திருப்பார் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Monday, April 20, 2009
எமது நண்பர், பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலையளிக்கின்றது: கேகலிய
Monday, April 20, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.