Monday, February 09, 2009

விசுவமடு பகுதியில் குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி; 90 படுகாயம்

[திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் சிறிலங்கா படைத்தரப்பின் 2 அதிகாரிகளும் 18 படையினரும் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2 அதிகாரிகளும் 48 படையினரும் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். விசுவமடு வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் பகுதியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.