[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,]
இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், பயங்கரவாதத்திற்கு துணை போகும் வகையிலும் அமெரிக்கத் தூதுவர் மெட்ராஸில் வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இலங்கைப் பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாக அமையாதென அமெரிக்கத் தூதுவர் றொபர்ன் பிளேக் வெளியிட்ட கருத்து இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதொன்றென ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் பதவியேற்ற நாள் முதல் இலங்கையின் உள்விவகாரங்களில் அதிகமாக தலையீடு செய்து வருவதாகவும், கட்சி விவகாரங்களில் கூட மூக்கை நுழைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேiவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஒமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.