[வியாழக்கிழமை, 17 யூலை 2008] களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்று சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஆனையிறவை நோக்கிய எமது அடுத்த நடவடிக்கை களநிலைமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, எமக்கு கள உத்தியின் அடிப்படையில் பல பயன்களை தந்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் இராணுவத்தை விட புலிகளுக்கே அதிக இழப்பு ஏற்பட்டது. புலிகள் எம்மை தாக்கும்வரை காத்திருக்க முடியாது.அதனால்தான், கடந்த தடவைகளில் நாம் தாக்குதல்களை மேற்கொண்டோம். அந்தவகையில், எமக்கு பின்னடைவே இல்லை. இதைவிட, யாழ். முன்னணி காவலரண்களில் எமது படையினர் புலிகளுக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறார்கள். வலிந்த தாக்குதல்களில் நாம் பாரிய வெற்றிகளை ஈட்டிவருகின்றோம். சிறப்புப் படையணியினரை தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி அவர்களின் உச்சவளத்தை பெற்றுக்கொள்கின்றோம். புலிகளுக்கு எதிரான போர் அநேகமாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளார். யாழ். நிலவரம் குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்கையில் - யாழ்ப்பாணத்தில் அமைதியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 2005 ஆம் ஆண்டு இருந்ததை விட நிலமை இப்போது எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட முற்றாக அகற்றப்பட்டு விட்டார்கள். முன்பிருந்ததை விட மிக மிக குறைந்த அளவு – ஐம்பதிற்கும் குறைவான எண்ணிக்கையான புலிகளே இப்போது குடாநாட்டில் உள்ளார்கள். குடாநாட்டில் இடம்பெறும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களுக்கும் எமது படைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எமது படையின்ர தமது தொழிலை மட்டும்தான் செய்கிறார்கள். வேறு குழுக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.