Sunday, May 18, 2008

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி நிறுத்தப்பட்டால் இலங்கையில் கைத்தொழில் பாதிக்கப்படும்

[ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகைத் திட்டம் நீடிக்கப்படாவிட்டாதல் கைத்தொழில்களில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பாதிக்கப்படுவார்கள் என பொருளியல் நிபுணர் சமன் கெலேகம தெரிவித்துள்ளார்.

மேலும் 2015 மிலேனிய அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் பொருளாதார இலக்கையும் அடைய முடியாது போகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்துறை தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு வேறும் விடயங்களை கருத்திற் கொள்வது நியாயமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்ää மனித உரிமை விவகாரங்களை கருத்திற் கொண்டே இம்முறை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை மறுக்கப்படுவதன் மூலம் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.