[ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008] மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் படையினரிடம் இருந்து ஆர்பிஜி - 01 ஆர்பிஜி எறிகணை - 04 ஆர்பிஜி புரப்பலர் - 04 ரி-56 ரக துப்பாக்கி - 03 ரவைக்கூடு - 29 குண்டு - 24 நடுத்தர ரவை - 2,070 நடுத்தர ரவைகள் இணைப்பிகளுடன் - 230 பிகே சுடுகுழல் - 02 பிகே ரவைகள் இணைப்பிகளுடன் - 1,885 பிகே ரவை - 228 கிளைமோர் - 01 ரவைத்தடுப்பு அணிகள் - 10 தலைக்கவசம் - 08 சப்பாத்துக்கள் - 11 சோடிகள் பை - 18 கொமாண்டோ குடிநீர் கொள்கலன் - 31 உரைப்பை - 150 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், நெடுங்கண்டல்குள அணையால் முன்னேறும் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
Sunday, May 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.