[திங்கட்கிழமை, 19 மே 2008,] மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 வேறு மோதல் சம்பவங்களில் 4 படையினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மணலாறு ஜனகபுர வடக்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆண்டான்குளம் பகுதியில் நேற்று காலை 8:50 மணியளவில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். ஜனகபுர வடக்கில் நேற்று காலை 6:10 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். கிரிபன்வேவப் பகுதியில் நேற்று பிற்பகல் 12:05 மணியளவில் இடம்பெற்ற மோதலில் 2 படையினர் காயமடைந்துள்ளனர்.
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.