Monday, May 19, 2008

தள்ளாடி சிறிலங்காப் படைத்தளம் மீது எறிகணைத் தாக்குதல்

[திங்கட்கிழமை, 19 மே 2008,] மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. மன்னார் களமுனையில் முதன்மையான பின்தளமாகவும், மன்னார் சிறிலங்காப் படையின் தலைமைத் தளமாகவும், ஆட்டிலெறித் தளமாகவும் தள்ளாடிப் படைத்தளம் உள்ளது. இப்படைத் தளத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இந்த எறிகணைத் தாக்குதலினால் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.