Sunday, November 04, 2007

கொழும்பு துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை

[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் துறைமுக காவல்துறை அதிகாரி பிரசன்னா பத்ரன (வயது 36) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரசன்னா பத்ரன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக தனது வாகனத்தை நோக்கிச் சென்றார். அப்போது தலைக்கவசம் அணிந்த நபர், பிரசன்னா பத்ரன மீது 6 முறை சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சூட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.