Tuesday, September 25, 2007

எரிக் சொல்ஹெய்ம்- மகிந்த நாளை சந்திப்பு?

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆம் ஆண்டு கூட்டத்துக்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாளை புதன்கிழமை நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் இலங்கைக்கான சிறப்புத்தூதுவர் ஹன்சன் பெளயர் ஆகியோரை சந்தித்துப் பேசக்கூடும் என்று நோர்வே தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா நேரப்படி இன்று திங்கட்கிழமை இரவு ஐ.நா. பொதுச்சபையில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து நாளை இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.