[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] மன்னாரில் தமிழீழ புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்றும் மேற்கொண்ட கடும் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர். கிபிர் வானூர்திகளும் இன்று தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான மாந்தை, பள்ளமடு நோக்கி இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளமடுவில், சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைகள் கூடுதலாக வீழ்ந்து வெடித்துள்ளன. அப்பகுதிகளில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிசெய்யமுடியவில்லை. காயமடைந்தவர்களை உயிலங்குளம் சோதனைச் சோதனைச் சாவடியூடாக கொண்டுவரும் முயற்சி பயனளிக்காத நிலையில் ஓமந்தையூடாக காயமடைந்தவர்களை கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் அரச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா இராணுவத்தினரின் கடும் எறிகணைத் தாக்குலால் பள்ளமடுவிற்கு இடம்பெயர்ந்திருந்த மக்களும், பள்ளமடுவில் நிரந்தரமாக இருந்த மக்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.
Tuesday, September 25, 2007
மன்னாரில் கடும் எறிகணைத் தாக்குதல்: பொதுமக்கள் படுகாயம்- இடம்பெயர்வு.!!
Tuesday, September 25, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.