[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பகுதியில் உள்ள கருணா குழு அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு இச்சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த கருணா குழுவின் இரண்டு உறுப்பினர்களும் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 4 அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நபர் ஒருவர் தப்பியோட முயற்சித்த போது துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி உள்ளார். அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பகுதியில் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நேற்று நள்ளிரவு அவரை கடத்த முயற்சித்துள்ளனர். சூட்டுக்காயமடைந்த இளைஞர் காரைதீவு ஊர்வீதியைச் சேர்ந்த வடிவேல் லோகாநாதன் (வயது 26) என தெரியவந்துள்ளது.
Sunday, September 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.