Sunday, September 23, 2007

அமெரிக்கத் தடையிலிருந்து தப்பிக்க தொடர்ந்து போராடும் சிறிலங்கா.!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007]


சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக போராடி வருகிறது.

அமெரிக்க செனட்டில் சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்துவது தொடர்பான அமெரிக்க செனற்றர் பற்றிக் லியககி தீர்மானத்தை அண்மையில் கொண்டுவந்தார்.

இந்தத் தீர்மானத்தைச் சட்டமாக்கி செயற்படுத்துவதைத் தடுக்க அமெரிக்காவின் அரச செயலகத்தின் கொள்கை வகுப்பாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை சிறிலங்கா மேற்கொண்டு வருகிறது. இச்செயலகத்தின் பரிந்துரைகளைத்தான் அமெரிக்க அரச தலைவர் ஏற்பார் என்றும் சிறிலங்கா நம்புகிறது.

அமெரிக்காவின் வோசிங்ரனில் உள்ள சிறிலங்கா தூதரகம், கொழும்பில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் காப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்துவதை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் முனைப்புடன் உள்ளதாக தெரிகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.