[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] சுவிஸ் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் பாரிய அழுத்தங்களுக்கு சிறிலங்கா உள்ளாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உள்ள சிறிலங்காவின் பிரதிநிதி, தனியான சந்திப்புக்களையும் அரங்கக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ஐ.நா. உறுப்பு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அவர் தனியே சந்தித்து வருகிறார். இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பல்வேறு தரப்பினரது அழுத்தங்களினால் இப்போது ஏதேனும் ஒரு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையை இலங்கையில் ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையான விவாதம் நடைபெற்று வருகிறது. சிறிலங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2 பொதுக்கூட்டங்கள், இத்தகைய விவாதங்களுடன் முடிவடைந்துள்ளது. சிறிலங்காவின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையப் பிரதிநிதி தயான் ஜயதிலக்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை 2 ஆவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறிலங்காத் தரப்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சிறிலங்கா சட்ட மா அதிபர் திணைக்களத்தின் யசந்த கொடேகொட உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை பரிந்துரை குறித்து ஜி.எல்.பீரிசுக்கும் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் செயலாளர் கிருபாகரனுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டது குறித்து பேசிய கிருபாகரன், பயங்கரவாத இயக்கமாக விடுதலைப் புலிகளை கருதியிருந்தால், ஏன் அமெரிக்காவின் கொண்டலீசா றைசும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைத் தலைமை நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர் என்று கேள்வி எழுப்பினார். அப்போது சிறிலங்கா தரப்பு மௌனமாகி விட்டது. நன்றி:புதினம்
Tuesday, September 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.