Tuesday, September 25, 2007

தமிழ் மக்களின் இறைமையை ஐ.நா. அங்கீகரிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள்

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007]


தமிழ் மக்களினது இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆம் ஆண்டு பொதுச் சபைக் கூட்டத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் தீமோர் மற்றும் கொசோவோ மக்களுக்கு வழங்கப்பட்டதனைப் போல தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான பொருத்தமான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

நேற்று திங்கட்கிழமை (24.09.07) அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை, இனச் சுத்திகரிப்பை, மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சினைக்குத் இறுதித் தீர்வைக் காண்பதற்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தை இந்த வழியில் கொண்டு வருவதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் கொடுக்க வேண்டும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், அனைத்துலக சமூகத்தின் முன்பாக அவர்கள் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரங்கள், போர் நிறுத்த உடன்படிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் அரசு திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் தொடர்பாகவுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.