Tuesday, September 25, 2007

10 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள்

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலி மற்றும் மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 10 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் கட்டுக்கரை மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1. கப்டன் இசையறிஞன் என்ற ஆனந்தராசா கன்சிலீன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: ராதிகா புவனேஸ்வரன், திருவையாறு, கிளிநொச்சி) 2. கப்டன் நித்தியராஜ் என்ற கோபாலகிருஸ்ணன் பிரதீபன் (மட்டக்களப்பு மாவட்டம்) 3. லெப். அருள்மலர் என்ற சுப்பிரமணியம் சுமித்திரா (இலக்கம்-68, சிவபுரம் வவுனிக்குளம்) 4. 2 ஆம் லெப். அருள்மங்கை அல்லது குயிலினி என்ற மெய்யழகன் பபிதா (மூன்றாம் வட்டாரம், முள்ளியவளை) 5. வீரவேங்கை சத்தியா அல்லது கலையருவி என்ற சிவகுமார் சுபாஞ்சலி (சொந்த முகவரி: இலக்கம்-08, கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சி, தற்காலிக முகவரி: மூன்றாம் பகுதி, திருவையாறு, கிளிநொச்சி) 6. வீரவேங்கை எழிலரசி என்ற பத்மநாதன் கோகிலா (லாலா குடியிருப்பு, முழங்காவில்) 7. வீரவேங்கை அருளினி என்ற சற்குணராசா குணராஜேஸ்வரி (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிராஞ்சி செல்வபுரம், பூநகரி) ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கிளாலி யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலிப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். 1. லெப். பிரதீபன் என்ற அருணாச்சலம் றோஜன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: கே.குணா, புளியங்குளம், தடைமுகாம் பணியாளர், வவுனியா) 2. 2 ஆம் லெப். அமுதன் அல்லது சோழன் என்ற சண்முகராசா யோகராசா (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், மற்றொரு முகவரி: ஆழ்வாப்பிள்ளை முதலாம் வீதி, செம்மலை, அளம்பில்) ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்க இராணுவத்தினருடன் நடைபெற்ற பிறிதொரு மோதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் நிலமகள் என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தவடிவேல் அலைமகள் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.