[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] ஒரு ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருப்பதும் அவர்கள் அரச நிறுவனங்களில் 90 விழுக்காடு அதிகாரத்தை கொண்டிருப்பதும் புதிய உலக சாதனையாகப் போகிறது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் வார இறுதி சிங்கள ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமா பண்டாரநாயக்கவும், பிரதமராகவும், அரச தலைவராகவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்கெனவே சாதனை படைத்துள்ளனர். மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகிய நால்வரும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார்களா என்பதற்கு உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத போதும் ஜனநாயக நாட்டில் குடும்ப நிர்வாகத்திற்கு ஏற்ப ராஜபக்ச குடும்பம் கட்டாயமாக உலக சாதனைக்கு தகுதி பெறுவதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில காலமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் தொடர்ச்சியாக ராஜபக்ச நிறுவனம் என்று குறிப்பிட்டு தற்போதைய அரசியல் நிர்வாகத்தை விமர்சித்து வந்த போதிலும் அதுகுறித்து எவ்வித அச்சமோ, வெட்கமோ இன்றி அந்த விடயத்தை மேலும் உறுதிப்படுத்தி பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததனூடாக இந்த உலக சாதனைக்கு ராஜபக்ச குடும்பத்தினர் உரிமை கோருகின்றனா. மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவை பெலியத்த தொகுதி அமைப்பாளராகவும், சமல் ராஜபக்சவின் மகனை மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்க அதிகாரபூர்வமற்ற வகையில் மகிந்த முடிவு செய்யப்பட்டிருப்பதனூடாக இது மேலும் உறுதியாவதாகவும் அந்த ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, September 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.