Sunday, September 23, 2007

கிளிநொச்சி மாணவன் தமிழ் மூல புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்.!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழவரன் தமிழ் மூலமாக புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி அகில இலங்கை ரீதியில் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 200 க்கு 200 புள்ளிகளை பெற்று களுத்துறை – ஹொரண கல்லூரி மாணவன் சாகி பசுரு வீரக்கோன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்முறை பரீட்சைக்கு நாடு பூராகவுமிருந்து 2 இலட்சத்து 93 ஆயிரத்து 937 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 70 ஆயிரத்து 209 மாணவர்கள் தமிழ்மொழியில் பரீட்சைக்கு தோற்றியதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.