[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007] சிறிலங்காவின் பல வெளிநாட்டுத் தூதுவர்களை மாற்ற அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. பிரசெல்சிற்கான தூதுவர் கே.ஜே.வீரசிங்க, ஜேர்மனிக்கான தூதுவர் ஜயந்த பலிபனே மற்றும் பிரான்சுக்கான தூதர் சி.வகிஸ்வர ஆகியோரை நாடு திரும்ப சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்புகள் இயக்குநராகப் பணிபுரிந்து வரும் ரவிநாத் அரியசிங்கவை பிரசெல்சிற்கான தூதுவராகவும், ஜேர்மனிக்கான தூதுவராக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டி.பி.மடுவெகெதரவை நியமிக்கவும் மகிந்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மலேசியாவுக்கான தூதுவராக ஜாதிக ஹெல உறுமயவின் பிரபல சட்டவாளர் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத் தலைவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். மேலும் சுவீடனின் தூதுவரும் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
Wednesday, September 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.