Wednesday, September 26, 2007

லெப்.கேணல் தீலீபன் மற்றும் கேணல் சங்கரின் இறுதி நாள் வணக்க நிகழ்வில் தேசியத் தலைவர் அகவணக்கம்

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007]


வன்னியில் கேணல் சங்கர் மற்றும் லெப். கேணல் திலீபன் ஆகியோருக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அகவணக்கம் செலுத்தினார்.

வன்னியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்று புதன்கிழமை (26.09.07) முற்பகல் 10.48 மணிக்கு நடைபெற்ற கேணல் சங்கர் மற்றும் லெப். கேணல் திலீபன் நினைவு நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்றார்.

இரு மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி, மலர்மாலையினை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார்.



ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், மூத்த தளபதி கேணல் சங்கர் ஆகிய மாவீரர்களுக்கு தமிழீழத் தாயகம் இன்று முற்பகல் 10.48 மணிக்கு அகவணக்கம் செலுத்தியது.

அம் மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிய 10.48 மணிக்கு தமிழீழ மக்களால் மணி ஒலி எழுப்பப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் இந்த வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.