[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் தீவிரமடைந்து வரும் மோதல்களைத் தொடர்ந்து அக்குழுவின் தலைவரான கருணா, நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடி விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்று புதன்கிழமை (26.09.07) வெளிவந்த ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகத்தில் நுழைவு அனுமதியைப் பெற்ற கருணா, கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். பிரித்தானியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வசித்துவரும் அவரது குடும்பத்துடன் அவர் தற்போது இணைந்துள்ளார். நிதி முறைகேடுகள் தொடர்பாக கருணா குழுவிற்குள் உள்ளக மோதல்கள் வெடித்திருந்தன. இதனைத் தொடர்ந்து பிள்ளையான் தனது குழுவினருடன் திருகோணமலைக்கு தப்பி ஒடியிருந்தார். எனினும் இரு தரப்பும் மறுதரப்பு உறுப்பினர்களை மாறி, மாறி படுகொலை செய்து வருகின்றன. பிள்ளையான அணியைச் சேர்ந்த சிலர் மட்டக்களப்பிற்குள் ஊடுருவியுள்ளதக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சிறிலங்கா இராணுவத்தின் மற்றுமொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. குழுவின் மீது கருணா குழு தாக்குதல்களை தீவிரப்படுத்தியதனைத் தொடர்ந்து கருணா குழு மீது அரசின் துணையுடன் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா அழுத்தங்களை பிரயோகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, September 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.