[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] கொழும்பு நகரில் பர்தா அணிந்த முஸ்லிம் தாயாருக்கு பாடசாலையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஊடகச் செய்தி: பொரளையில் உள்ள ரத்னவெலி பாலிகா மகா வித்தியாலயத்துக்கு அதன் அதிபரை சந்திக்க, முஸ்லிம் பெண்களின் உடையான "பர்தா" அணிந்து ஒரு மாணவியின் தாயார் சென்றுள்ளார். ஆனால் அவரை அந்த பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தி உள்ளார். பாடசாலைக்குள் செல்ல வேண்டுமெனில் "பர்தா"வை நீக்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "பர்தாவை" நீக்காமல் உள்ளே செல்ல ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து வேறுவழியின்றி "பர்தா"வை நீக்கி பாடசாலை அதிபரை சந்தித்துவிட்டு அந்த முஸ்லிம் தாயார் திரும்பியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த முஸ்லிம் தாயார், முகம் தெரியும்படியாக "பர்தா" அணிந்துதான் தான் சென்றதாகவும் ஆனால் வேறு வழியில்லாமல் பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தியபடி "பர்தா"வையும் நீக்கிவிட்டுச் செல்ல வேண்டியதாக இருந்தது. அதேபோல் முஸ்லிம் மாணவிகளின் உடைகளுக்கும் அந்த பாடசாலை கட்டுப்பாடு விதித்துள்ளது என்றார் . பௌத்த பிக்கு ஒருவர் அந்த பாடசாலைக்கு அண்மையில் சென்று திரும்பிய பின்னரே இத்தகைய முடிவுகளை அந்தப் பாடசாலை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகத் தெரிகிறது என்று கொழும்பு ஊடகத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Sunday, September 23, 2007
பர்தா அணிந்த முஸ்லிம் தாயாருக்கு பாடசாலையில் நுழைய அனுமதி மறுப்பு.!
Sunday, September 23, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.