Friday, September 14, 2007

யாழ் குடாநாட்டில் பொருட்களுக்கான விலைகள் அதிகரிப்பு.!

[வெள்ளிக்கிழமை, 14 செப்ரெம்பர் 2007]

யாழ்ப்பாணத்தில் மீண்டும் உணவுப் பொருட்களுக்கு தட்டப்பாடுகள் காணப்படுவதுடன். விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் காரணமாக பொது மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள் தொழில்களை இழந்து வருமானம் இன்றி இருக்கும் மக்கள் இதன் காரணமாக பெரும் நெருக்கடிகளுக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்திற்க்கு வேண்டிய பொருட்கள் கப்பல்களில் எடுத்துது வருவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் சந்தையில் இந்தப் பொருட்களை பெற முடியாத நிலமையே கடந்த பல மாதங்களாக தொடாந்த வண்ணம் இருக்கின்றன. தனியார் வர்த்தகர்கள் இதனை சாட்டாக வைத்து அதிக மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

சீனி 100 ரூபா முதல் 125 ரூபா வரையிலும் பருப்பு 120 ரூபா முதல் 150 ரூபா வரையிலும் மா 100 ரூபா என்ற விலையிலும் விற்கப்படுவதுடன் அரிசியும் 100 ரூபாவுக்குஅதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

நிவாரணத்தை நம்பி வாழும் மக்கள் உரிய காலத்தில் நிவாரணங்களும் கிடைக்கப் பெறாமையால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.