Monday, September 24, 2007

மோதல்களை நிறுத்தி சமாதான பேச்சுகளை ஆரம்பிக்க அவுஸ்திரேலியா நியுசிலாந்து அழைப்பு.!!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] இலங்கையில் மோதல்களை நிறுத்தி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவுஸ்திரேலியாவும்,நியுசிலாந்தும் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ,விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தும் கருணா குழுவிடமிருந்தும் விலகிய சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாரும் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை அமர்வின் போதே அவை இவ்வாறி தெரிவித்துள்ளன.அத்துடன் இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான சர்வதேச ஆதரவை தாம் வழங்குவதகவும் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளை மனித உரிமை மீறல்கள் மோதல்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளது.இவற்றில் ஈடுப்படும் தரப்புகள் வன்முறைகளை கைவிட்டு பேச்சுவார்த்தைகளை மீள் ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அமி.லௌரென்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கெய் ஒபிரேன்ன மோதல்களால் இடம்பெயர்தல்கள் அதிகரித்துவருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான சிருவர்கள் பாதிக்கின்றமை கவலையளிக்கிறதாக தெரிவித்துள்ளனர் அத்துடன் வடக்கு கிழக்கு மோதல்கள் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பையும் நலன்களையும் பேணுவதற்கு வேவையான உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.