Monday, September 24, 2007

மன்னார் பகுதியில் ஆட்டிலறி சூட்டு பரிமாற்றம்

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] ஞாயிற்றுக்கிழமை வவுனியா மன்னார் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து திங்கட்கிழமை காலை 5.30 முதல் கடும் எறிகணை தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான மாந்தைப்பகுதிநோக்கி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மன்னார் பொதுவைத்தியசாலை, முருங்கன் மாவட்ட வைத்தியசாலை ஆகியனவும் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் செம்மந்தீவு மற்றும் கட்டைக்காடு ஆகியபகுதிகளில இருந்து மாந்தை மேற்கு பரப்புக்கண்டான் பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளும் இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதி உயிர்த்தராசன்குளம் நோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சில எறிகணைகள் மன்னார் மதவாச்சி வீதியில் உள்ள விவசாய பயிற்சி நிலைய கட்டிடத்தொகுதிக்குள்ளும் மற்றும் சில உயிர்த்தராசன்குளம் விளையாட்டு மைதானத்தினுள் விழுந்து வெடித்ததாகவும் தெரியவருகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.