Sunday, September 23, 2007

யாழில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை.!!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை சிவன் கோவிலடியில உள்ள உணவுச்சாலை உரிமையாளரான பருத்தித்துறை ஜயனார் வீதியைச் சேர்ந்த குலேந்திரமோகன் சுதாகர் (வயது 27) சிறிலங்கா இராணுவத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணியளவில் அவரது உணவத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்தனர். இவரது உணவகத்தினை நேற்று ஆறு உந்துருளிகளில் சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் சோதனையிட்டு விட்டு சென்றதனைத் தொடர்ந்து இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். பருத்தித்துறை தும்பளை லட்சுமணன் தோட்டப்பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் லட்சுமணன் ஜயர் (வயது 37) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரது வீட்டில் இருந்தபோது உந்துருளியில் வந்த சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.