Sunday, September 23, 2007

மன்னார் மோதலில் இராணுவத்தைச் சேர்ந்தவர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] மன்னார் மடு தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர். தம்பனைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இம் மோதல் நிகழ்ந்துள்ளது. இதனிடையே மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பள்ளமடுப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் தொடரான பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் கண்ணாட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோசப் அமலேஸ்வரன் (வயது 48) என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பள்ளமடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.