[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007]
திருகோணமலை பொது மருத்துவமனை மருத்துவர்களும், தாதியர்களும் கருணா குழுவினரின் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தற்போது சிக்கியுள்ளனர். அவர்கள் துணை இராணுவக் குழுவினரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதிகாரிகளிடம் 500,000 ரூபாய்கள் கப்பமாக கருணா குழுவினரினால் கோரப்பட்டுள்ளது. இந்த பெரும் தொகையை தம்மால் செலுத்த முடியாது என்று அதிகாரிகள் கூறிய போது வெளிநாடுகளில் உள்ள அவர்களின் உறவினர்களை கருணா குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் தமது அலுவலகங்களில் உள்ள உயர்மட்ட உறுப்பினர்களுடன் பேசி இந்த தொகையை குறைக்க முடியும் எனவும் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதே போன்ற சம்பவங்கள் வவுனியா மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளன.
எனினும் கப்பமாக கோரப்பட்ட தொகை குறைவானது. வெளிநாடுகளில் உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு 300,000 ரூபாய்களும், ஏனையோருக்கு 100,000 ரூபாய்களும் கப்ப பணமாக கோரப்பட்டுள்ளது.
இந்த தொகையை ஒரே தவணையில் செலுத்த முடியாதவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய்கள் செலுத்த வேண்டும் என்ற தவணைமுறை செலுத்தும் "வசதி"களையும் துணை இராணுவக் குழு அறிமுகப்படுத்தியுள்ளது. புளொட் அமைப்பே இதனை செய்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோவில்குளம், தோணிக்கல், சிதம்பரபுரம், வேப்பம்குளம் ஆகிய பகுதிகளில் புளொட் அமைப்பு பணம் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஈபிடிபியினர் நிலைகொண்டுள்ள தீவுப் பகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணம் அறவிடுதல் நடைபெறுகின்றது.
மகிந்த ராஜபக்ச அரசு பதவிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களிடம் துணை இராணுவ குழுவினர் பணம் அறவிடுதல் அதிகரித்துள்ளது. கிழக்கிலும் வரிகளை அறவிடுதல் மக்களை துன்புறுத்துதல் என்பன துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களை கடத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் கொழும்பிலும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் அதிகரித்து காணப்பட்டது. விடுதலைப் புலிகளுடன் போர் தொடங்கியதிலிருந்து அரசுகள் துணை இராணுவ குழுவினருக்கு நிதிகளை வழங்கி வருவது இரகசியமானது அல்ல.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தின் போதும் அது நடைபெற்றே வந்தது. துணை இராணுவக் குழுவினர் பொதுமக்களுக்கு நெருக்கடிகளை கொடுப்பதனை தவிர்ப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டு வந்தது. துணை இராணுவக் குழுவினரின் இந்த பணம் பறிக்கும் நடவடிக்கைகள் இந்த குழுவினருக்கு நிதியை வழங்குவதனை அரசு நிறுத்தி விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எனினும் துணை இராணுவக் குழுவினர் விரைவாக பணம் சம்பாதித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடிவருவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த சிலரும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கடத்தல்கள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பான விசாரணைகள் தேவை.
இந்த கடத்தல்களில் ஈடுபட்டதாக வான்படை அதிகாரி உட்பட பலர் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் விசாரணைகளில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தகவலை அடுத்தே வான்படை அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தீர்ப்பதற்கு ஒரே வழி துணை இராணுவக் குழுவினரை இராணுவத்தில் இணைப்பதுதான். கருணா குழுவினருடன் இராணுவத்திற்கு தொடர்புகள் உள்ளது என்பது இரகசியமல்ல. திருகோணமலையில் கருணா குழுவினர் பகல் நேரங்களில் பல அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் கறுப்பு உடைகளுடன் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியாவில் புளொட் அமைப்பினரின் உதவியை இராணுவத்தினர் பெற்று வருகின்றனர். கள நிலமை தொடர்பான தகவல்கள், மொழி போன்றவை தொடர்பான உதவிகளை இராணுவத்தினர் அவர்களிடம் பெற்று வருகின்றனர்.
மேலும் விடுதலைப்புலி உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கும், புலனாய்வு தகவல்களை பெறுவதற்கும் துணை இராணுவக்குழுவினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன் அரசுகள் அவர்களை பாதுகாத்தும் வருகின்றது.
அவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டால், உயிரிழக்கும் போது அவர்களது குடும்பத்தினருக்கு கொடுப்பனவுகளும் கிடைக்கும். அரசியல் தீர்வை முன்வைக்கும் திட்டம் அரசிற்கு இருப்பின் தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சேர்க்க அவர்கள் முன்வர வேண்டும். தற்போது இராணுவத்தில் தமிழர்கள் இல்லை.
துணை இராணுவக் குழுவினரை இராணுவத்தில் இணைப்பதன் மூலம் அனைத்துலக சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களை அரசு தவிர்க்க முடியும். இது விடுதலைப் புலிகளுடனான மோதல்களுக்கு முக்கியமானது.
தமிழ் மக்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்கள் மீதான மனித உரிமை மீறல்களில் இராணுவத்தினர் சிலரது உதவிகளுடன் துணை இராணுவக் குழுவினரே பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்
Monday, September 24, 2007
இராணுவத்தினர் உதவியுடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் துணை இராணுவக் குழுவினர்: கொழும்பு வார ஏடு.!!
Monday, September 24, 2007
No comments
கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்:
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.