Monday, September 24, 2007

கருணா குழுவை "அரசியல் கட்சியாக" மாற்றிய பாதுகாப்பு அமைச்சு.!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு "ஒரு அரசியல் கட்சியாக" "மாற்றம்" செய்துள்ளது. கிழக்கில் ஆயுதம் தாங்கிய நிலையில்தான் நாங்கள் நிற்போம் என்று கருணா குழு பகிரங்கமாக அறிவித்து வருகிறது. கருணா குழுவினரின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்று அனைத்துலகமும் இதர துணை இராணுவக் குழுக்களும் வலியுறுத்தி வருகின்றன. கருணா குழுவும் இரண்டாகப் பிளவுபட்டு தொடர்ச்சியான ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். துணை இராணுவக் குழுக்களான ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (பத்மநாபா அணி) ஆகியவற்றுடன் கருணா குழுவினர் நேரடி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த ஒருவரை கருணா குழு படுகொலை செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கருணா குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். கருணா குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், "தமிழ் அரசியல் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்" என்று குறிப்பிட்டுள்ளது. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றிவிட்டோம் என்று கூறிவரும் அதே சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் இப்படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று கூறி துணை இராணுவக் குழுக்களிடையேயான உள்மோதல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது. நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.