Monday, September 24, 2007

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு.!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினம்" செய்தியாளரிடம் இளந்திரையன் கூறியதாவது: மன்னார் - வவுனியா சாலையில் உள்ள கட்டுக்கரைக்குளம் அடைக்கலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய அளவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள் என்று பலமான சூட்டாதரவுடன் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினர் அடைக்கலமோட்டைப்பகுதி வழியாக முன்னகர்வை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்பு அணிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினர். பெரும் இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்றனர். சிறிலங்கா இராணுவத்தினரின் இம் முன்நகர்வு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முறியடிக்கப்பட்டது. இந்த எதிர்ச் சமரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சிறிலங்கா இராணுவத்தினர், பின்தளங்களிலிருந்து சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே மன்னார் உயிலங்குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று நடைபெற்ற நேரடி மோதலின் போது லெப். கேணல் குயில் என்று அழைக்கப்படும் வத்திராயன் வடக்கு தாளையடியை சொந்த முகவரியாகவும், சிவக்குமார் அல்லது கனிகடை சாந்தி குடியிருப்பு கல்லாறு பிரமந்தனாற்றை வேறு முகவரியாகவும் கொண்ட தெய்வேந்திரம் லதா என்ற போராளியே வீரச்சாவடைந்துள்ளார். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.