Wednesday, September 26, 2007

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு.!!

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007] சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தினை அடைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்ற போதும், சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த இராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமை சபையிலும், பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், எதிர்வரும் மாதம் சிறிலங்காவிற்கு செல்லவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் பயணத்தின் பின்னர் அதனை நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடான போத்துக்கல் தீர்மானித்துள்ளது. ஆர்பரின் பயணத்தில் ஏற்படும் விளைவுகள் வரையிலும் காத்திருப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த இரு வருடங்களில் சிறிலங்கா அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தை மூன்று தடவைகள் ஒத்திவைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆர்பரின் சிறிலங்கா பயணத்தைத் தொடர்ந்து ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதியான பீற்றர் ஸ்பிலின்ரர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.