Tuesday, September 18, 2007

20 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது தமிழீழ ஒறுப்புச்சட்டத்தின் திருத்தச்சட்டம்.!

[செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2007] தமிழீழ ஒறுப்புச் சட்டத்தின் திருத்தச்சட்டம் நாளை மறுநாள் வியாழக்கிழமை (20.09.07) முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறை சட்டவாக்கச் செயலகம் தெரிவித்துள்ளது. இது தமிழீழ ஒறுப்புச்சட்டத்தின் சில ஏற்பாடுகளை நீக்குவதற்கும் திருத்தத்திற்கும் மேலதிகக் குற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துவதற்குமான சட்டமாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதலுடன் 2007 ஆம் ஆண்டின் முதலாம் எண் சட்டமாகத் தமிழீழ சட்டவாக்கச் செயலகத்தால் வெளியிடப்படுவதுடன் நாளை மறுநாள் முதல் நடைமுறைக்கு வருகின்றது என்று தமிழீழ சட்டவாக்கச் செயலகம் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.