Thursday, August 30, 2007

அதிகமான காணாமல் போதல்களுக்கு இராணுவமும், கருணா குழுவுமே காரணம்: அனைத்துலக மன்னிப்பு சபை

[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007]


இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை சிறிலங்கா இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவைதான் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

2006 ஆம் ஆண்டு குறைந்த பட்சம் 1,000 பேர் காணாமல் போனதாக பதிவுகள் கூறும் நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

குறிப்பாக ஓகஸ்ட் மாதம் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் காணாமல் போயுள்ளனர் என்று சிறிலங்காவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கூறுகிறது.

சட்டவிரோதமான கொலைகளும், ஆட்கடத்தல்களும் பலவந்தமாக காணாமல் போகச்செய்யும் செயற்பாடுகளும் தற்போது நாளாந்தம் நடைபெறுகின்றன.

இத்தகைய மனித உரிமை மீறல் வன்முறைகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானயானவை குறித்தே விசாரணைகள் நடைபெற்றுள்ளன.

பலவந்தமாக காணாமல் போனார் தொடர்பான 5,700 சம்பவங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினால் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே பலவந்தமாக காணாமல் போகச் செய்தலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை நடைமுறைப்படுத்தும்படி அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

அத்துடன் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினரை வருமாறு அழைப்பு விடுத்து முன்னர் செய்யப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் சிறிலங்கா அரசை அனைத்துலக மன்னிப்புச் சபை கோருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.