[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007]
இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பெயரில் புலிகளுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்கவே பிரித்தானிய அரசாங்கம் முயற்சி செய்கிறது.
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் சிறிலங்காவின் உள்விவகாரத்தில் தலையிடுகின்றன. அந்த வரிசையில் பிரித்தானியாவும் சேர்ந்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கைக்கான சமாதான திட்டத்தை அந்த நாட்டில் உள்ள மூன்று அமைப்புக்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
சிறிலங்காவின் அனுமதியின்றி இந்த தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் இறைமை கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. நோர்வேயை பயன்படுத்தி பிரபாகரன் முலம் இலங்கையை துண்டாட மேற்குலகம் மேற்கொண்ட முயற்சிகள் பின்தள்ளப்பட்ட நிலையில் இப்போது பிரித்தானியா இதற்கான முயற்சியை தொடர்கிறது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைப் பெற்று நோர்வே முலம் மீண்டும் பேச்சு நடத்த பிரித்தானியா திட்டம் வகுத்துள்ளது.
அது மட்டுமில்லை. சிறிலங்கா இராணுவத்தினருக்கு மனித உரிமை குறித்து கல்வி புகட்ட வேண்டுமாம். ஆயுதக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டுமாம். பிரித்தானியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது இது குறித்து கூறுவதற்கு?
இப்படி ஒரு திட்டத்தைக்கொண்டுவந்து இராணுவத்தினரையும், புலிகளையும் ஆயுத பலத்தில் சமப்படுத்தவே பிரித்தானியா முனைகிறது. அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தாது குருடனைப் போல உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இதுதான் சந்தரப்பம் என்று ஆட்சியைக் கவிழ்க்க பார்க்கிறது. எனவே இந்த விடயம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார் அவர்.
நன்றி : புதினம்
Thursday, August 30, 2007
பிரித்தானியாவின் தீர்வுத் திட்டத்துக்கு ஜே.வி.பி. கடும் கண்டனம்
Thursday, August 30, 2007
No comments
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இன்று புதன்கிழமை கூறியதாவது:
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.