Friday, August 24, 2007

அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி இரு சிறப்பு அதிரடிப் படையினர் படுகாயம்

[வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007] அம்பாறை கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் சிறீலங்காப் சிறப்ப அதிரடிப் படையினர் இருவர் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிச் சென்ற சிறப்பு அதிரடிப் படையினரே பொறிவெடியில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளனர். 36 அகவையுடைய எம்.ஜ.பி.ரொசாந்த, 32 அகவையுடைய விக்கிரமராச்சி ஆகியோரே படுகாயமடைந்துள்ளவர்கள் என பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். படுகாயமடைந்த அதிரடிப் படையினர் இருவரும் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.