[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் விமான நிலைய ஊழியர்கள் கையடக்க தொலைபேசியைப் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
கையடக்க தொலைபேசி உரையாடல்கள் மூலம் விமான நிலைய எல்லைக்குள் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் இதர குற்றச் செயல்களை தடுப்பதற்கான இத்தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், விமானப் பயணிகள் கையடக்க தொலைபேசியை உபயோகிப்பது தடை செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவகால விடுமுறையை முன்னிட்டு பல இலங்கையர்கள் நாடு திரும்புவதும் மற்றும் வெளிநாடு செல்வோரினதும் அளவு அதிகரித்துள்ளமையினாலும் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக விமான நிலைய ஊழியர்கள் கையடக்க தொலைபேசியை உபயோகிப்பதை தடை செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முடிவு பாதுகாப்புக் கருதி மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, August 27, 2007
விமான நிலைய ஊழியர்கள் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை
Monday, August 27, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.