[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]
கிரேக்க நாட்டில் முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற ஒலிம்பியா கிராமத்தை காட்டுத்தீ அச்சுறுத்தி வருகின்றது.
இதனை அடுத்து அருகே இருக்கின்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பியா கிராமத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தை தீ நெருங்கியுள்ளது.
அவசரகால நடவடிக்கைகளை மேற்பார்வையிட கிரேக்க கலாச்சார அமைச்சர் அங்கு சென்றுள்ளனர்.
பெலோப்பியோ கிராமத்தின் பிரதான வீதி தீப்பற்றி எரிந்து வருவதாகவும், கரும்புகை எங்கும் சூழ்ந்திருப்பதாகவும் அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.
வலுவடைந்து வரும் காற்றானது தீயை பரவுவதாகக் கூறப்படுகின்றது.
தீயணைப்பு பணியில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு விமானங்களும் ஈடுப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பரவி வரும் தீயினால் அங்கு ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்.
அவசரகால நடவடிக்கைகளை மேற்பார்வையிட கிரேக்க கலாச்சார அமைச்சர் அங்கு சென்றுள்ளனர்.
பெலோப்பியோ கிராமத்தின் பிரதான வீதி தீப்பற்றி எரிந்து வருவதாகவும், கரும்புகை எங்கும் சூழ்ந்திருப்பதாகவும் அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.
வலுவடைந்து வரும் காற்றானது தீயை பரவுவதாகக் கூறப்படுகின்றது.
தீயணைப்பு பணியில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு விமானங்களும் ஈடுப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பரவி வரும் தீயினால் அங்கு ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.