Monday, August 27, 2007

கருணா குழுவை ஓரங்கட்டி கிழக்கில் புதிய கூட்டணிக்கு அரசு ஆதரவு?

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]


கிழக்கில் இவ்வருட இறுதியில் நடத்த உத்தேசித்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் கருணா குழுவினரை ஓரங்கட்டி புதிய தமிழ் அமைப்பை நிலைநிறுத்துவதன் மூலம் அரசாங்கம் தனது தந்திரோபாயத்தைக் கையாள இருப்பதாக ஆங்கில வார இதழொன்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அடுத்த சில வாரங்களில் இவை தமது அரசியல் நடவடிக்கைகளை கிழக்கில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இணைந்து தமிழ் ஜனநாயக முன்னணி என்ற ஒரு குடையின் கீழ் இயங்கவுள்ளன. இதர தமிழ் கட்சிகளையும் தம்முடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

இவ் அமைப்புக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதற்கு அடையாளமாக அண்மையில் இவ் அமைப்பின் தலைவர்களான ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா அணியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு மட்டக்களப்புக்குச் சென்றுவர ஹெலிகொப்டர் வசதி வழங்கியதிலிருந்து புலனாகின்றது.

மட்டக்களப்புக்கான தமது விஜயத்தை முடித்துக்கொண்ட இக்குழுவினர் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர். கிழக்குப் பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதே தமது நோக்கம் என்றம் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.