Thursday, August 16, 2007

அக்கரைப்பற்றில் தாயும் குழந்தையும் இனந்தெரியாதோரினால் வெட்டிக்கொலை

[வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007] அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோச்சிப்பட்டிக் கிராமத்தில் குடும்ப பெண்மணி ஒருவரும், அவருடைய இரண்டு வயது பாலகனும் இனந்தெரியாதோர்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மர்ழியா (வயது 26), இவரது மகன் துஹைஸ் அகமட் (வயது 02) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டவர்களாவர். இக்கொலை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்தபோதே மேற்படி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.