Monday, July 02, 2007

அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி - ஐதேக தீர்மானம்.!

[திங்கட்கிழமை, 2 யூலை 2007]

இம்மாதம் 26ம் திகதி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இத தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது

இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அழைத்து வந்து தலைநகர் கொழும்பில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராட்சி ஆகியோருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது

இந்த பேரணியை தொடாந்து நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்கு எதிரான பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.