[சனிக்கிழமை, 21 யூலை 2007] யாழ்ப்பாணம் அத்தியடியில் பிரபல வர்த்தகரான செல்லத்துரை சண்முகதாசன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.25 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ். ஸ்ரான்லி வீதியில் உள்ள "அல்டி" மின்சார உபகரண விற்பனை நிலையத்தின் உரிமையாளரான செல்லத்துரை சண்முகதாசன் (வயது 56), கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். யாழ். மருத்துவமனையில் பதில் நீதிபதி மு. திருநாவுக்கரசு விசாரணைகளை நடத்தினார். சண்முகதாசனின் மகன், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதை விரும்பாத சக்திகளே சண்முகதாசனை சுட்டுக் கொன்றதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
Saturday, July 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.