[சனிக்கிழமை, 21 யூலை 2007] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க ஊடகங்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: குடும்பிமலை தொடர்பாக ரணில் இன்று பேசியதை அரச ஊடகங்கள் திரிபுபடுத்தி பிரசாரப்படுத்தி வருகின்றன. 1993 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு அன்றைய பிரதமர் ரணில்தான் தலைமை தாங்கினார். குடும்பிமலை கைப்பற்றப்பட்டது இது முதல் தடவை போல கூறுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் குடும்பிமலை கைப்பற்றப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. குடும்பிமலையைக் கைப்பற்றி கிழக்கில் தேர்தல் நடத்தியதன் பின்னர்தான் முன்னாள் அரச தலைவரிடம் 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கையளித்தது. ஆனால் அந்த அரசாங்கம் வடக்கை கைப்பற்ற முயற்சித்து கிழக்கை கைவிட்டு விட்டது. அதற்கு அன்றைய பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்தவும் பொறுப்பேற்க வேண்டும். குடும்பிமலையை மட்டுமல்ல, இதர பிரதேசங்களையும் படையினரால் கைப்பற்ற முடியும். ஆனால் அதற்கு நல்ல தலைமைதான் தேவைப்படுகின்றது. கிழக்கு முழுமையாக கைப்பற்றப்பட்டு விட்டதாக கூறினால் அமைச்சர்கள் முன்னே செல்லுங்கள். நாங்கள் பின்னால் சுற்றுலா வருகிறோம். விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்த போது கிழக்கு மாகாண மக்கள் புலிகளின் தலைவரின் படத்தை அவமரியாதை செய்ததாக தெரிவித்தனர். யார் தீட்டிய திட்டத்தின் மூலம் ஏற்பட்ட பிரதிபலனால் இப்படி நடந்தது என்பது தெரியுமா? ரணிலுடைய ஆட்சியின் காலத்தில் புலிகளின் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியதன் காரணமாகவே கிழக்கு மாகாண மக்கள் இப்படி நடந்து கொண்டனர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார் அவர்.
Saturday, July 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.