Thursday, June 28, 2007

இலங்கையில் உயரும் கப்பற் கட்டணங்களால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு.!

[வியாழக்கிழமை, 28 யூன் 2007]

இலங்கையில் கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 அடி கொள்கலன் ஒன்றிற்கு 600 டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் விலை நேரம் என்பவற்றுடன் போட்டியிட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் சில கப்பற்கம்பனிகள் தமது வழமையான கடற் போக்கு வரத்து பாதையினை கடந்த 6 மாத காலமாக மாற்றியுள்ளனர் இதனால் ஆடை, தேயிலை ,இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படுள்ளதாக இலங்கை கப்பல் சங்க தலைவர் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார். ஆடை உற்பத்தி இலங்கை எறக்குறைய 7 மில்லியன் டொலர் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள கப்பல் ஏற்றுமதி பிரச்சினையால் பிரபல வர்த்தக நிறுவனங்கள் விக்டோரியா, சீக்ரட். கப், நைக், மார்க்ஸ் மற்றும் பென்சர் ஆகிய கம்பனிகளிடம் இருந்து இலங்கை ஏற்றுமதியாளர் போதுமான கால அவகாசம் இன்றி நெருக்கடிக்கப்படுகின்றனர்.

கடற்போக்குவரத்து தவிர விமானம் மூலம் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனினும் கடற்போக்குவரத்து மூலமான ஏற்றுமதியை விட 7.5% அதிகளவில் விமான மூலமான ஏற்றுமதிக்கு செலவிட வேண்டியுள்ளதாக கப்பற்துறை ஆலோசகர் ரொகான மாசகோரனள தெரிவித்துள்ளதாக ஏ.எ.பி செய்தி தெரிவித்துள்ளது.

அதேவேளை கொழும்பு துறைமுகம் மலாக்கா அரபிக்க்டல் சுயஸ்கால்வாய் என்பவற்றிக்கு எதிரே இருப்பாதால் ஆசிய ஐரோப்பிய அமெரிக்காவிற்குமான கடற் போக்குவரத்திற்கு சுலபமாக இருந்தது எனினும் பெரிய கம்பனிகளான மேர்க் யுனைட்டர் அரபு கப்பல் கம்பனி,நொராசியா ,கெரெய்ர், கேடலைன் மற்றும் ஹைஜின் என்பன தற்போது கொழும்பு துறைமுகத்தில் தரிக்காது மும்பாய் போன்ற இந்திய துறைமுகங்களிற்கு செல்கின்றன. முதல் இக் கம்பனிகளின் கப்பல்கள் கொழும்பில் தரிக்கப்பட்டு இந்திய பொருட்களை ஐரோப்பியாவிற்கு எடுத்து செல்லும்

தற்பொது இக்கம்பனிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. என பெரேரா தெரிவித்தார்

. தற்போது பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என்ற அச்சத்தினை கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இரவு வேளைகளில் ஒரு கப்பல் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்தில் வந்து தாமதம் இன்றி வந்து செல்லலாம் இந்தியா அடுத்த 4 வருடங்களில் ஐரோப்பாவிற்கான கடல்வழி மூலமான ஏற்றுமதி மூலம் 18 சதவீதம் வளச்சியடைந்து விடும் எனினும் இலங்கை வளச்சியை பெருக்க முடியாமல் போகுமோ என்ற அச்சம் எனக்கு எழுந்துள்ளது என கப்பற் சங்க தலைவர் ஜெயானந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.