[வியாழக்கிழமை, 28 யூன் 2007] "பி.பி.சி.' ஊடகவியலாளர் அலன் ஜோன்ஸ்டனைக் கடத்திச் சென்று பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ள "இஸ்லாமிய இராணுவம்' என்றழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்படி பிரித்தானிய ஊடகவியலாளரை கொன்றுவிடப் போவதாக புதிய அச்சுறுத்தல் ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை தொழுகைக்காக காஸா பள்ளிவாசலுக்கு சென்ற தமது இரு அங்கத்தவர்களை ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்றுள்ளதாக இஸ்லாமிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் காஸாவில் வைத்து இஸ்லாமிய இராணுவத்துடன் தொடர்புடைய இருவரை தமது இயக்கத்தினர் கைது செய்துள்ளதை ஹமாஸின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்லாமிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவ் அமைப்பின் அங்கத்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டதற்கும், அலன் ஜோன்ஸ்டன் தொடர்பான கொலை அச்சுறுத்தலுக்கும் சம்பந்தமிருக்கலாம் என கருதப்படுகிறது. மேற்படி அச்சுறுத்தல் அறிக்கையில் தடுத்து வைப்புகளானது போருக்கான பிரகடனமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட அங்கியுடன் அலன் ஜோன்ஸ்டன் தோன்றும் வீடியோ காட்சியொன்றை இஸ்லாமிய இராணுவம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது தன்னை பலவந்தமாக மீட்க முயற்சிப்பின் தன்னைக் கொன்று விடுவதாக போராளிகள் அச்சுறுத்தியுள்ளதாக அலன் ஜோன்ஸ்டன் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சியில் ஜோர்தானில் பிறந்த பாலஸ்தீன முஸ்லிம் மத தலைவர் தலைவரான அபு கராடாவை பிரித்தானியா விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிய இராணுவம் முன்வைத்திருந்தது. 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை பின்னணியிலிருந்து வழிநடத்திய மொஹமட் அத்தா போன்ற பயங்கரவாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமான எடுத்துக்காட்டாக அபு கராடா விளங்கியதாக பிரித்தானிய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒஸாமா பின்லேடனின் ஐரோப்பாவுக்கான ஆன்மீக தூதுவராக கருதப்படும் அபு கராடா, பல தீவிரவாத அமைப்புகளுடன் சந்தேகத்திற்கிடமான தொடர்புகளைக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு நவம்பரில் அம்மானில் திருமண விருந்துபசாரம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சம்பந்தமுடையவர் என்ற குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் சஜிதா அல் றிஷாவி என்ற ஈராக்கிய பெண்ணும் விடுதலை செய்யப்பட வேண்டும் என இஸ்லாமிய இராணுவ இயக்கம் கோரியுள்ளது. அம்மானில் 2005 ஆம் ஆண்டில் 60 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்த மூன்று ஹோட்டல் குண்டுத் தாக்குதல்களில் இந்தத் திருமண விருந்துபசார குண்டுத் தாக்குதலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான அல் றிஷாவி அவரது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Thursday, June 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.