Thursday, June 28, 2007

சிறிலங்காவின் சட்டங்கள் அனைத்தும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவை. (கருத்தாய்வு)

[வியாழக்கிழமை, 28 யூன் 2007] ராணுவம் மற்றும் ஒட்டுக்குழு என்போர் ஊடக சுதந்திரத்தை மீறிச்செயற்படுகின்றனர் இவர்களால் ஊடகவியளாலர்கள் உயிராபத்தைத் தினம் தினம் சந்திக்கின்றனர். இது சிறிலங்காவில் நிகழும் துரதிஸ்டமான போக்காகும் . இவை அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவையாகும் என அனைத்துலக ஊடகவியளாலர் குழு சிறிலங்கா அரசைச் சாடியுள்ளது. இந்த எல்லைகள் அற்ற ஊடகவியளாலர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி வின்சன்பரோஸல் அனைத்துல ஊடகக் கூட்டமைப்பின் இயக்குனர் ஜாக்குலின்பார்க் ஆகியோர் கொண்ட குழு கொழும்பிற்கு வருகை தந்து பல்வேறு ஊடக வியளார்களைச் சந்தித்து கலந்துரையாடிவிட்டு நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இக்குழு யாழ்சென்று ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது. இக்குழு இதற்கு முன்னரும் பல தடவை இலங்கை வந்திருக்கிறது நிலமைகளை மதிப்பீடு செய்து அரசிற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. அது எதனையும் இக்குழு செயற்படுத்தவில்லை என இக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழர் வாழும் பகுதிகளில் ஊடகத்துறையும் தமிழர் ஊடகங்களும் பல்வேறுபிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை குழு ஒப்புக்கொண்டுள்ளது. 2005 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பதினொரு ஊடகவியளாலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு ஆக்கப+ர்வமான விசாரனை எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் மிக அண்மையில் நடந்த ரஜிவர்மன் சுபாஸ் சந்திரபோஸ் ஆகிய தமிழ் ஊடகவியளாலர்களின் நிலைபற்றியும் அரசு கவனம் செலுத்தவில்லை என அக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மகிநை;த ஜனாதிபதியாக பதவியேற்ற பிற்பாடு இன்றுவரை 6000 ற்கு மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக ஒரு கணக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒரு குறுகிய காலத்திற்குள் இவ்வளவு கொலைகள் நடந்துள்ளது என்றால் அது மகிந்தவின் காலத்தில் தான் நடந்திருக்கிறது மகிந்தவின் அறாஜக ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பியதால் தான் இவ்வளவு ஊடகவியளாலர்களும் படு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படை. ஊடகவியளாலருக்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை மகிந்த ஆட்சியால்தான் ஏற்பட்;டது. போர்ச்சூழ் நிலவுகின்ற சூழலில் ஊடகவியளாலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது ஒரு நியாயப்பாடான விடயமே ஆனால் சிறிலங்காவில் உள்ள அனைத்துச்சட்டங்களும் ஊடகச்சுதந்திரத்திற்கு எதிரானவையாகவே உள்ளன. என்பதையும் இந்தக்குழு சுட்டிக்காட்டியுளளது. சட்டங்கள் ஒழுங்குமுறைகள் அதிகாரங்கள் குறிப்பாக அவசரகாலச்சட்ட விதிமுறைகள் உத்தியோக ப+ர்வ இரகசிய சட்டம் ஒளிஒலி அமைப்புச்சட்டம் போன்ற அனைத்துமே உலக ஊடகச்சுதந்திரம் மற்றும் கருத்துச்சுதந்திரம் போன்றவற்றுக்கு முகம் கொடுக்கத்தவறிவிட்டன என்றும் அந்தக்குழு அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை ஊடகத்துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை இலங்கை அரசிடம் முன்வைத்துள்ளன . அரசு பரிசீலிக்காவிட்டால் அனைத்துலக ஊடகஅமைப்பு நடவடிக்கை எடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்கானிப்புக்குழு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் இக்குழு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. -கலி-

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.