Thursday, June 28, 2007

வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம்.!

[வியாழக்கிழமை, 28 யூன் 2007] இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் பறப்பில் ஈடுபடவில்லை எனத் தெரியவருகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.