மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உரிய நேரத்தில் கவிழ்ப்போம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மக்கள் பிரிவு) தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நிறுவனர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகிய இருவரும் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
நாம் உரிய நேரத்தில் மகிந்தவின் அரசாங்கத்தில் உள்ள 15 முதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது பக்கம் உள்வாங்குவோம்.
116 உறுப்பினர்களின் பலத்துடன் தான் தற்போது ஆட்சி நடந்து வருகின்றது. எனவே புதிய கட்சியினால் இந்த சமன்பாட்டை மாற்றுவது கடினமாக இருக்காது. நாம் அவசரப்படக்கூடாது.
சுதந்திரக் கட்சியை சரியான பாதையில் செல்ல வைப்பது தான் எமது முதலாவது படி. தேர்தல் காலத்தின் போது மகிந்தவின் சகோதரர்களை நான் கண்டது அரிது. நாம் ஆதரவு தெரிவித்த குதிரை விரைவாக தடம் மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை.
ராஜபக்ச குழுவினது கேவலமான வேலைகளினால் சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் மாசடைந்துள்ளன. தற்போது சுதந்திரக்கட்சி வற்புறுத்தல்களினால் கட்டுப்படுத்தப்பபட்டு வருகின்றது. அதனை செய்பவர்கள் கட்சி அங்கத்தவர்களோ அல்லது இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களோ அல்ல.
முன்னாள் அரச தலைவர் சந்திரிகா நாட்டை நடுநிலையான வழியில் ஆட்சி செய்திருந்தார். அவரை நாம் எம்முடன் சேருமாறு அழைக்கிறோம். அவருக்கு மீண்டும் அரசியலில் இணைய விருப்பம் இல்லை. எனினும் எமது குறிக்கோளை அடைவதற்காக எம்மை வழிநடத்த அத்தகைய ஒரு தலைவர் எமக்கு தேவை.
சிலருக்கு தற்போது சந்திரிகா போவியா என்ற நோய் பிடித்துள்ளது. அவர்கள் அதிகளவில் அச்சமடைந்துள்ளனர். தமது படுக்கைக்கு கீழே ஆவி இல்லை என உறுதிப்படுத்தும் வரை அவர்கள் உறங்க மாட்டார்கள் என்றனர் அவர்கள்.
நாம் உரிய நேரத்தில் மகிந்தவின் அரசாங்கத்தில் உள்ள 15 முதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது பக்கம் உள்வாங்குவோம்.
116 உறுப்பினர்களின் பலத்துடன் தான் தற்போது ஆட்சி நடந்து வருகின்றது. எனவே புதிய கட்சியினால் இந்த சமன்பாட்டை மாற்றுவது கடினமாக இருக்காது. நாம் அவசரப்படக்கூடாது.
சுதந்திரக் கட்சியை சரியான பாதையில் செல்ல வைப்பது தான் எமது முதலாவது படி. தேர்தல் காலத்தின் போது மகிந்தவின் சகோதரர்களை நான் கண்டது அரிது. நாம் ஆதரவு தெரிவித்த குதிரை விரைவாக தடம் மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை.
ராஜபக்ச குழுவினது கேவலமான வேலைகளினால் சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் மாசடைந்துள்ளன. தற்போது சுதந்திரக்கட்சி வற்புறுத்தல்களினால் கட்டுப்படுத்தப்பபட்டு வருகின்றது. அதனை செய்பவர்கள் கட்சி அங்கத்தவர்களோ அல்லது இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களோ அல்ல.
முன்னாள் அரச தலைவர் சந்திரிகா நாட்டை நடுநிலையான வழியில் ஆட்சி செய்திருந்தார். அவரை நாம் எம்முடன் சேருமாறு அழைக்கிறோம். அவருக்கு மீண்டும் அரசியலில் இணைய விருப்பம் இல்லை. எனினும் எமது குறிக்கோளை அடைவதற்காக எம்மை வழிநடத்த அத்தகைய ஒரு தலைவர் எமக்கு தேவை.
சிலருக்கு தற்போது சந்திரிகா போவியா என்ற நோய் பிடித்துள்ளது. அவர்கள் அதிகளவில் அச்சமடைந்துள்ளனர். தமது படுக்கைக்கு கீழே ஆவி இல்லை என உறுதிப்படுத்தும் வரை அவர்கள் உறங்க மாட்டார்கள் என்றனர் அவர்கள்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.