Sunday, June 24, 2007

கிழக்கு மோதல்களில் படையினருக்கு கடும் இழப்பு: கொழும்பு ஊடகம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] கிழக்கு மாகாணத்தில் உள்ள தொப்பிக்கல காட்டுப்பகுதியில் இடம்பெற்று வரும் சமர்களில் படையினருக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொப்பிக்கலப் பகுதியில் உள்ள நரகமுல்ல பகுதி மீதான படை நடவடிக்கை கடந்த 8 ஆம் நாள் ஆரம்பமாகியது. இராணுவத்தின் கொமொண்டோப் பிரிவினர் முதலில் தாக்குதலில் இறங்கிய போதும் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் தமது ருக்கம் வடக்கு நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். மறுநாள் பீரங்கித் தாக்குதல்களுடன் சமர் மீண்டும் ஆரம்பித்தது. எனினும் முன்னேறிய படையினருடன் மூண்ட பெரும் மோதல் தொடர்கின்றது. விடுதலைப் புலிகள் தமது நிலைகளில் இருந்து பின்வாங்கி வருவது படையினருக்கு நெருக்கடிகளை அதிகரித்து வருகின்றது. இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டதுடன், 6 அதிகாரிகளும் 142 படையினரும் காயமடைந்துள்ளதாக உயர் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் 400 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் 100 பேர் காயமடைந்தள்ளதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது. இந்த தரவு மிக அதிகமானது. இது படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்ட கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.