இலங்கைக்கு வந்த இந்திய சமாதானப் படையினரால் கூட கைப்பற்ற முடியாமல் போன தொப்பிகலை (குடும்பி மலை) பிரதேசத்தை எமது பாதுகாப்புப் படையினர் இன்னும் சில தினங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவர். இப்போது 99 வீதமான பிரதேசத்தை அவர்கள் விடுவித்துள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
புலிகளின் கொடுமைகளிலிருந்து தொப்பிகலை பிரதேச பொது மக்களைப் பாதுகாத்து அப்பிரதேசத்தை முழுமையாக விடுவிக்க வியூகங்கள் வகுத்து படையினர் நிதானமாக முன்னேறி வருகின்றனர் என்றார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
இப்பிரதேசத்தில் உள்ள இரு முக்கிய வீதிகளை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் நேற்று கொண்டுவந்தனர். நாரகமுல்லையிலிருந்து சித்தாண்டி வரைக்கும் மற்றும் நாரகமுல்லையிலிருந்து பன்குடாவெளி வரைக்கும் செல்லும் வீதிகளையே படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வீதிகளிலுள்ள பாலங்கள் மற்றும் மதகுகளை சேதப்படுத்திக் கொண்டே புலிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இவற்றை உடனடியாக புனரமைக்கும் பணியில் இராணுவப் பொறியியலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தப்பியோடும் புலிகள் நாரகமுல்லையில் பெருந்தொகையான பொருட்களையும் வாகனங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
வாகரைப் பிரதேசத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன. திருகோணமலை தெற்குப் பிரதேசத்தில் இப்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
புலிகளின் கொடுமைகளிலிருந்து தொப்பிகலை பிரதேச பொது மக்களைப் பாதுகாத்து அப்பிரதேசத்தை முழுமையாக விடுவிக்க வியூகங்கள் வகுத்து படையினர் நிதானமாக முன்னேறி வருகின்றனர் என்றார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
இப்பிரதேசத்தில் உள்ள இரு முக்கிய வீதிகளை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் நேற்று கொண்டுவந்தனர். நாரகமுல்லையிலிருந்து சித்தாண்டி வரைக்கும் மற்றும் நாரகமுல்லையிலிருந்து பன்குடாவெளி வரைக்கும் செல்லும் வீதிகளையே படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வீதிகளிலுள்ள பாலங்கள் மற்றும் மதகுகளை சேதப்படுத்திக் கொண்டே புலிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இவற்றை உடனடியாக புனரமைக்கும் பணியில் இராணுவப் பொறியியலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தப்பியோடும் புலிகள் நாரகமுல்லையில் பெருந்தொகையான பொருட்களையும் வாகனங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
வாகரைப் பிரதேசத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன. திருகோணமலை தெற்குப் பிரதேசத்தில் இப்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.